புதுச்சேரி அரசு பேருந்துகளை தமிழக டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்ய அனுமதி..!

Default Image

வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் புதுச்சேரி பேருந்துகளில் தமிழக போக்குவரத்து டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் கவனத்திற்கு தெரிவிப்பது யாதெனில், நமது கழகத்தின்மூலம் இயக்கப்படும் தொலைதூர பேருந்துகளை, தமிழ்நாடு போக்குவரத்து கழக பரிசோதனை ஆய்வாளர்கள் பரிசோதனை செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆதலால், நமது பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்து கழக பரிசோதனை ஆய்வாளர்கள் பரிசோதனை செய்ய நிறுத்தினால், பேருந்துகளை நிறுத்தி பரிசோனைக்கு வேண்டிய பயணச்சீட்டு இயந்திரம், வழிதட பட்டியல், பயணிகள் விபர பட்டியல் போன்ற பரிசோதனைக்கு உரிய ஆவணங்களை எந்தவித தடைகளும் கூறாமல் அவர்களிடம் சமர்பித்து பரிசோதனைக்கு ஒத்துழைக்குமாறு கோரப்படுகிறது.

மேலும், பரிசோதனையின்போது அவர்களிடம் எந்தவித வாக்குவாதத்திலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GO

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்