கொரோனா பாதிப்பில் கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் 3வது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.
தினசரி கொரோனா பாதிப்பில் கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கொரோனா அதிகரிக்கிறது என்றும் இந்தியாவில் 13 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கு அதிகமான கொரோனா நோயாளிகள் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதுபோன்று 6 மாநிலங்களில் 50,000 முதல் ஒரு லட்சம் வரை கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 17 மாநிலங்களில் 50,000க்கும் கீழ் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் நேற்று 28,978 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 14,09,237 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அதுபோல இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2,29,92,517 ஆக அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…