தமிழக அரசு தொடங்கியுள்ள காவிரி-குண்டாறு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு காவிரி நீரை பங்கிட்டு காவிரி – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை தொடங்கி உள்ளது. இதன் மூலம் காவிரி நீர் பங்கிடப்பட்டு பெரிய அளவில் நீர் பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வழிவகை செய்யப்படும். இந்நிலையில், இது தொடர்பாக நேற்று திருப்பதியில் நடந்த தென் மாநிலங்களின் வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர் காவிரி – குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை எனவும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மீறி உபரி நீரை பயன்படுத்தி பெரிய அளவில் நீர் பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என தான் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…