தமிழகத்தில் சென்னை உட்பட 12 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவிப்பு.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 40 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிய உள்ளது. இதையெடுத்து, கொரோனா பாதித்த 733 மாவட்டங்களை மத்திய சுகாதாரத்துறை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மூன்று மண்டலங்களாக பிரித்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவும், 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், 319 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் உள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள, சிவப்பு மண்டலங்களில் நாளை மறுநாளுக்கு பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலம், ஆரஞ்சு மண்டலங்களில் ஓரளவு கட்டுப்பாடும் தளர்வும், பச்சை மண்டலத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு அறிவித்த சிவப்பு மண்டலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14, உத்தரப்பிரதேசத்தில் 19, தமிழகத்தில் 12, டெல்லியில் 11 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் 12 சிவப்பு மண்டலங்கள், 24 ஆரஞ்சு மண்டலங்கள் மற்றும் 1 பசுமை மண்டலம் உள்ளது.
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…