இன்று கட்கர் கலானில் பகத் சிங்கின் உருவ படத்திற்கு இன்று மலர்தூவி மரியாதை செலுத்திய பகவந்த் மான் லஞ்ச ஒழிப்பு உதவி எண்-ஐ அறிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர், லாகூர் மத்திய சிறையில், கடந்த 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவு நாள் மாவீரர்கள் தினம் என அழைக்கப்படுகிறது.
பொதுவிடுமுறை
பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் பஞ்சாப் சட்டப்பேரவையில் பேசிய போது சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23-ஆம் தேதி, மாவீரர் தினத்தையொட்டி பொது விடுமுறை அளிக்கப்படும் என்றும், பகத்சிங்கின் சொந்த கிராமமான கட்கர் கலான் கிராமத்திற்கு நேரில் சென்று அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் பஞ்சம மக்களை கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று (மார்ச்-23) பள்ளி கல்லூரிக ளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு உதவி எண்
இந்த நிலையில், இன்று கட்கர் கலானில் பகத் சிங்கின் உருவ படத்திற்கு இன்று மலர்தூவி மரியாதை செலுத்திய பகவந்த் மான் லஞ்ச ஒழிப்பு உதவி எண்-ஐ அறிவித்துள்ளார். இதுகுறித்து பகவந்த் மான் பேசியதாவது,’லஞ்ச ஒழிப்பு எண்-ஐ இன்றுமுதல் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துவுள்ளோம். நீங்கள் அளிக்கும் புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். 9501200200 என்ற எண்ணிற்கு வரும் புகார்களை ஆராய்ந்து, எங்களின் பணியாளர்கள் நேர்மையாகவும், கடுமையான நடவடிக்கையும் எடுப்பார்கள். உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் அதை விடியோ எடுத்து அனுப்புங்கள’ எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…