கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு பாருங்கள், சடலங்கள் ஆற்றில் மிதக்கிறது – பிரதமரை விமர்சிக்கும் ராகுல்காந்தி!

Published by
Rebekal

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரதமர் தனது பிங்க் நிற கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு பார்த்தால் தான் சடலங்கள் ஆற்றில் மிதப்பதை பார்க்க முடியும் என ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே தான் செல்கிறது. கொரோனா நாடு முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தினமும் உயிரிழப்புகள் மற்றும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

எனவே, பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா விவகாரத்தினை மத்திய அரசு முறையாக கையாள்வது இல்லை என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஆற்றில் வீசப்பட்டு, பீகார் வந்தடைவதாக  குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி அவர்கள், கொரோனாவால் பலியானவர்களின் உடல்கள் நதிகளில் அடித்துச் செல்லப்பட்டு கொண்டிருக்கிறது; மக்கள் கொரோனா சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்து இருகின்றனர், மக்களின் வாழ்க்கை பாதுகாப்புக்கான உரிமை பறிக்கப்பட்டு கொண்டிருப்பதாகவும் ஆனால், பிரதமர் மோடி தனது பிங்க் நிற கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு பார்த்தால் மற்ற விவகாரங்களும் தெரியும். இந்த பிங்க் நிற கண்ணாடியில் பார்த்தால் சென்ட்ரல் விஷ்டாவை தவிர வேறு ஒன்றும் தெரியாது என கடுமையாக சாடியுள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

3 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

23 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

47 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago