இன்று புற்றுநோய் என்பது சர்வசாதாரணமாக மாறிவிட்டது. இந்த நோயால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கிரண்.
இவர் அங்குள்ள கல்லூரியில், இதழியல் முதலாம் ஆண்டு பயின்று வருகின்றார். இவர் புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில், தனது தலைமுடியை மொட்டை அடித்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிக்க தானமாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து மாணவி கிரண் அவர்கள் கூறுகையில், ‘எனது பள்ளி பருவத்தில் நண்பர் ஒருவர் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் கீமோதெரபி சிகிச்சையின் போது, அவருக்கு முடி கொட்டியது. அதற்கு பின் அவர் விக் பயன்படுத்தினார்.
அப்போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணிய போது, இரண்டு வருடங்களுக்கு முன்பு சில தனியார் தொண்டு நிறுவனங்கள் மொட்டை அடித்த முடியை வாங்கி விக் தயாரிப்பதை கேள்விபட்டேன்.
அப்போது நான் பாய் கேட் வைத்திருந்தேன். இந்த தகவலை கேள்வி படத்திலிருந்து எனது முடியை நீளமாக வளர்க்க ஆரம்பித்தேன். தற்போது நான் மொட்டை அடித்து எனது முடி அனைத்தையும் விக் செய்ய தானமாக கொடுத்துள்ளேன்’ என கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…