இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் முகலாய பேரரசர் ஷாஜகானால் கடந்த 1632-இல் கட்டப்பட்ட நிலையில்,உலக அதியங்களில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது.
இந்நிலையில்,தாஜ்மஹால் கட்டடம் கட்டப்பட்ட நிலம் முதலில் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தமானது என்றும், அதன்பின்னர்,இந்த நிலம் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது என்றும்,ராஜஸ்தானின் பாரதிய ஜனதா (பாஜக) நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,இது தொடர்பாக முன்னாள் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த எம்பி குமாரி கூறுகையில்,”இந்த நிலம் ஜெய்ப்பூர் குடும்பத்துக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன.அதை ஷாஜகான் கையகப்படுத்தினார்.
ஆனால்,அப்போது நீதிமன்றம் இல்லாததால்,அந்த நேரத்தில் மேல்முறையீடு செய்திருக்க முடியாது.பதிவேடுகளை ஆய்வு செய்த பிறகே விஷயங்கள் தெளிவாகும்.எனினும்,அப்போதைய சூழ்நிலைகள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை,ஆனால் எங்களிடம் உள்ள ஏதேனும் ஆவணங்களை வழங்குமாறு நீதிமன்றம் கேட்டால்,நாங்கள் வழங்குவோம்”,என்று கூறியுள்ளார்.
மேலும்,”தாஜ்மஹாலில் ஏன் பல அறைகள் பூட்டப்பட்டுள்ளன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.பல அறைகள் அங்கு சீல் வைக்கப்பட்டுள்ளன,கதவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்”,என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து,இது தொடர்பாக முன்னாள் கேபினட் அமைச்சரும்,பாஜக பிரமுகருமான சுப்பிரமணிய சாமி கூறுகையில்,”ஆம்,அது அவரது மூதாதையரான ராஜாவிடமிருந்து ஷாஜஹானால் பறிக்கப்பட்ட நிலம்.இதில் அவருக்கு உரிமை உண்டு.எனவே தியா குமாரிக்கு அந்த நிலம் கிடைத்தவுடன், தாஜ்மஹால் சேதமடையாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில்,அவர் இடிக்கப்பட்ட சிவன் கோயிலை அதே பகுதியில் மீண்டும் கட்டுவார் என்று நம்புகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே,உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தின் பாஜக ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங்,“தாஜ்மஹாலில் சுமார் 20 அறைகள் பூட்டப்பட்டுள்ளன,யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில்,இந்த அறைகளில்,இந்து கடவுள்களின் சிலைகள் மற்றும் புனித நூல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது,”என்று கூறி தாஜ்மஹாலுக்குள் 20 அறைகளை திறக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிடக் கோரி மே 4 ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…