பரபரப்பு.! மெட்ரோ ரயிலில் மின் இணைப்பை துண்டித்து மின் கம்பியை திருடிய மர்மநபர்கள்.!

Default Image
  • டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் பாதையில் இருந்த மின்வயர்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
  • மின்கம்பங்களின் மீது இரும்பு கம்பியை வீசி மின் இணைப்பை துண்டித்த பின் இந்த  திருட்டில் ஈடுபட்டு உள்ளனர்.

தலைநகர் டெல்லி எலக்ட்ரானிக் சிட்டி அருகே மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது. மேம்பாலத்தில் செல்லும் இந்த ரெயில் பாதையில் உள்ள மின்கம்பங்களில் ஏறி மர்மநபர்கள் மின் வயர்களை வெட்டி திருடிச்சென்றனர்.

இந்நிலையில் மர்மநபர்கள் முன்னதாக  மின்கம்பங்களின் மீது இரும்பு கம்பியை வீசி மின் இணைப்பை துண்டித்தபின் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து காசியாபாத் போலீசார் விசாரணை நடத்தி அருகில் உள்ள கோடா கிராமத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 200 மீட்டர் நீளம் கொண்ட 4 கட்டு மின் வயர்களை பறிமுதல் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்