மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைபடி ஜூலை முதல் 28% உயர வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசுப்பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதங்களில் முதல் தேதியன்று அகவிலைப்படியை உயர்த்துகிறது. இதன்படி கடந்த 2020 ஜனவரியில் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தியது.
பின்னர் கொரோனா காரணமாக அகவிலைப்படியை நிறுத்தி வைத்தது. இந்நிலையில், அகவிலைபடி வரும் ஜூலை முதல் 17% முதல் 28% வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஜனவரி முதல் ஜூன் வரை அகவிலைப்படி 3% சதவீதமும், 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை 4 சதவீதமும், 2021 ஜனவரி முதல் ஜூன் வரை 4% சதவீதமும் அதிகரித்து ஒட்டுமொத்த அகவிலைபடி (17 + 4 + 3 + 4=28) சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அகவிலைபடி உயர்வு வரும் ஜூலை 1 முதல் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மத்திய ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் அகவிலைபடி அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…