Preneet Kaur: மக்களவை தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பியும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியுமான பிரனீத் கவுர் பாஜகவில் இணைந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா எம்.பியான பிரனீத் கவுர் வரும் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 இல் முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகு, அமரீந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸை உருவாக்கி, அதற்கு அடுத்த ஆண்டு அதை பாஜகவுடன் இணைத்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பாஜகவுக்கு உதவியதாகவும், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காகவும் பிரனீத் கவுர் காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப்படியான சூழலில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர்கள் வினோத் தாவ்டே, தருண் சுக் மற்றும் அக்கட்சியின் பஞ்சாப் தலைவர் சுனில் ஜாகர் ஆகியோர் முன்னிலையில் பிரனீத் கவுர் இன்று பாஜகவில் இணைந்தார்.
பின்னர் அவர் கூறுகையில், “நான் இன்று பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக மக்களவையிலும், சட்டமன்றத்திலும் பணியாற்றியுள்ளேன். அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் மோடி மற்றும் அவரது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது: என்றார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…