ஊரடங்கை மீறியதற்காக மனநலம் பாதித்தவரை அடித்து கொன்ற காவலர்கள் 8 பேர் சஸ்பெண்ட்!

Published by
Rebekal
  • கர்நாடகத்தில் ராய் டிசோசா என்னும் 50 வயது மனநல பாதிக்கப்பட்ட முதியவர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
  • இது தொடர்பாக 8 காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கொடகு மாவட்டத்தில் வசித்து வரக்கூடியவர் தான் மனநலம் குன்றிய 50 வயது முதியவர் ராய் டிசோசா. இவர் ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சென்றதற்காக காவலர்களால் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந் நிலையில் உயிரிழந்த டிசோசாவின் சகோதரர் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது சகோதரர் டிசோசா ஊரடங்கு விதிகளை மீறியதாக காவல்துறையினர் அவரை அழைத்து சென்றதாகவும், அங்கு அவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் பின் அவரை அடித்ததால் தான் அவர் உயிரிழந்து விட்டார் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் உயிரிழந்ததாக அவரது தாயாரை அழைத்து, வீட்டிற்கு எடுத்து  செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் பதறிய அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துமனையில் டிசோசாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் ந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை அடித்து கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் 8 பேர் தற்பொழுது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago