காங்கிரஸ் ஆட்சியில் முத்தலாக் ரத்து…. சுஸ்மித்தா தேவ் உறுதி…!!

Default Image

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கையை தீவிர படுத்தி வருகின்றனர்.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது.

இதையடுத்து , டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு மாநாடு நடைபெற்று வருகின்றது.இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி , காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவி சுஸ்மித்தா தேவ் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் சுஸ்மித்தா தேவ்  பேசுகையில் , மோடி அரசு கொண்டுவந்த முத்தலாக் சட்ட மசோதாவை எதிர்த்து மக்களவையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது , முத்தலாக் சட்ட மசோதாவை எதிர்த்து கையெழுத்து இயக்கம் போராட்டம் நடைபெற்று வருகின்றது . மேலும் அவர் கூறுகையில் , முஸ்லீம் ஆண்களை சிறையில் தள்ள வேண்டுமென்று மோடி அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் போது முத்தலாக் சட்டத்தை ரத்து செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்