விடைபெற்றார் சுஷ்மா ! மயானத்தில் வைத்து உடல் தகனம் செய்யப்பட்டது

Default Image

மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.

சுஷ்மா சுவராஜ்  மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார்.இவருக்கு வயது 67 ஆகும். இவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

சுஷ்மாவின் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.குடியரசு தலைவர் ,பிரதமர் உள்ளிட்டோர் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினார்கள்.இதற்கு பின்னர் சுஷ்மாவின் உடல் பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.பின் சுஷ்மா சுவராஜ் இறுதி ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.லோதி சாலை மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது .பின்னர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ,பிரதமர் நரேந்திர மோடி ,மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா,பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.இறுதியாக  சுஷ்மா உடலுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டு  உடல் தகனம் செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்