சுஷாந்த் மரண வழக்கு: ரியாவின் தம்பியை 9-ம் தேதி வரை காவலில் விசாரிக்க அனுமதி.!

Published by
murugan

ஷோவிக் சக்ரபர்த்தி மற்றும் சாமுவேல் மிரான்டாவை செப்டம்பர் 9-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 24 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தற்போது இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வுசெய்தபோது, அவர் போதைப்பொருள் உபயோகித்தும், அது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நேற்று மும்பையில் உள்ள ரியாவின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர் வீட்டில் போதைப்பொருட்கள் இருந்ததும், ரியாவின் தம்பியான ஷோவிக் சக்ரபோர்த்தி, சாமுவேல் மிராண்டா, ஜைத் மற்றும் கைசன் இப்ராஹிம் ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, இன்று ஷோவிக் சக்ரபோர்த்தி மற்றும் சுஷாந்தின் மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோருக்கு மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மும்பை, எஸ்பிளான்டேவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் செப்டம்பர் 9-ம் தேதி வரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரிக்க  நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

Published by
murugan

Recent Posts

தமிழ்நாடு சட்டப்பேரவை: பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்.!

தமிழ்நாடு சட்டப்பேரவை: பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்.!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…

3 minutes ago

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

13 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

14 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

15 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

17 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

18 hours ago