சுஷாந்த் சிங் வழக்கு..! இன்று ரியா மீண்டும் ஆஜராக உத்தரவு..!

Published by
murugan

கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதனால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில்  நடிகை ரியா, அவரது சகோதரருக்கும்  போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது, சுஷாந்த் சிங் உதவியாளர் சாமுவேல் மிரண்டாவிற்கு கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ரியா தம்பி சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டா வீடுகளில் சோதனை நடைபெற்ற பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இருவரையும் வருகின்ற 9 -ம் தேதி வரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் காலை ரியா வீட்டிற்கு சென்று நேரில் விசாரணைக்கு ஆஜராக  சம்மன் வழங்கினர்.

பின்னர், மதியம் 12 மணியளவில் ரியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அங்கு அவரிடம் 6 மணி விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, ரியா  வீட்டிற்கு சென்றார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் சூழ்ந்த பத்திரிகையாளர்கள் ரியாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு  தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. சுஷாந்த் சிங் பயன்படுத்தி வந்தார் என கூறினார்.

இந்நிலையில், இன்று ரியா மீண்டும் ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு  சமன் அனுப்பி உள்ளது.

Published by
murugan

Recent Posts

மக்களே! (01-10-2024) செவ்வாய்க்கிழமை இந்த மாவட்டத்தில் மின்தடை!

மக்களே! (01-10-2024) செவ்வாய்க்கிழமை இந்த மாவட்டத்தில் மின்தடை!

சென்னை : (01-10-2024) செவ்வாய்க்கிழமை  உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவலை…

6 hours ago

“திமுக ஆட்சியில் ரூ.92 ஆயிரம் கோடி கடன்., ” துணை முதல்வர் உதயநிதியின் முதல் நிகழ்ச்சி., முதல் உரை.,

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர்…

6 hours ago

இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!

மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5…

6 hours ago

ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு : பேச வாய்ப்பு கேட்டு ஆர்த்தி உருக்கம்!!

சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது.…

6 hours ago

IND vs BAN : நிறைவடைந்த 4-ஆம் நாள் ஆட்டம்! 26 ரன்கள் பின்னிலையில் வங்கதேச அணி!

கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக…

7 hours ago

சேட்டன் வந்தல்லே.. காந்தி ஜெயந்திக்கு சேட்டை செய்ய வரும் வேட்டையன்.!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில்,…

7 hours ago