ஐஎன்எக்ஸ்  மீடியா வழக்கு : சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

Default Image

ஐஎன்எக்ஸ்  மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லி உய்ரநீதிமன்றத்தில்  முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில்மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது .ஓன்று  சிபிஐக்கு எதிராகவும்,அமலாக்கத்துறைக்கு எதிராகவும் தாக்கல் செய்யபப்பட்டது.ஆனால் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்த  நிலையில் சிபிஐக்கு எதிராக தாக்கல்  செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை இன்று  வரை கைது செய்ய தடை விதித்தது உச்சநீதிமன்றம். இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதாடினார்.அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார்.இரு தரப்பு வாதத்திற்கும் பின்னர்  ஐஎன்எக்ஸ்  மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நாளை காலை வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai
rain update
Chennai high court