சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணை வருகின்ற 6- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பிற்கு பின் பல முறை கோவில் நடை திறக்கப்பட்டது. ஆனால் கோவிலில் பெண்கள் நுழைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சீராய்வு மனுக்கள் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் விசாரணை நடைபெற்றது
அதன் பிறகு , அந்த சீராய்வு மனுவில் முடிவு எட்டப்படாததால், சீராய்வு மனுக்களின் மீதான விசாரணையை 9 பேர் கொண்ட நீதிபதி அமர்வுக்கு மாற்றி பரிந்துரை செய்யப்பட்டது. எனவே உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையிலான 9 பேர் கொண்ட நீதிபதி அமர்வு இன்று சீராய்வு மனுக்களை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில், மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் தலைமைநீதிபதி பாப்டே அறிவித்தார்.மேலும் மனுக்கள் மீது யார் யார் எப்போது வாதிடுவது தொடர்பான நேரம் பிப்ரவரி 6-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…