Delhi CM Arvind Kejriwal [File Image]
டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வேளையில், கடந்த வியாழன் அன்று சிறப்பு நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. அதனை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கெஜ்ரிவால் ஜமீனுக்கு அடுத்த நாளே (வெள்ளி) தடை வாங்கியது.
இந்த ஜாமீன் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற கெஜ்ரிவால் தரப்பு இதனை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என கோரியிருந்தது. அதன் படி இன்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அப்போது, இந்த பிணை தொடர்பான வழக்கு ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் தற்போது உச்சநீதிமன்றம் இதில் தலையிட தேவையில்லை என்று கூறி, வழக்கை வரும் ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து உச்சநீதிமன்றம் செல்ல கெஜ்ரிவால் தரப்பு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…