வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் வன்னியர்களுக்கு (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ) 10.5% தனி இட ஒதுக்கீடு சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியின் போது வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு அளித்து அரசாணை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த இடஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்குமாறு சந்தீப் மற்றும் முத்துக்குமார் என்பவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இது நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து நீதிபதி கூறுகையில், உள்ஒதுக்கீடு சட்டத்தை நாங்கள் படித்து பார்த்ததாகவும் அதற்க்கு தடைவிதிக்க போவதில்லை என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும், ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் மதுரையை சேர்ந்த அபிஷ் குமார் என்பவர் தாக்கல் செய்த நிலுவையில் உள்ள இடஒதுக்கீடு வழக்குகளுடன் சேர்த்து வன்னியர் இடஒதுக்கீடு வழக்கும் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…