காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் சரமரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அம்மாநிலத்திற்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்து 370-வதை ரத்து செய்வதாகவும் ,காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் ,சட்டப்பிரிவு 370-வதை ரத்து செய்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் 6 வழக்குகள் தொடரப்பட்டது.
மேலும் டைம்ஸ் நாளிதழின் எடிட்டர் அனுராதா பாசின் ,கருத்துரிமையை மறுக்கும் வகையில் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ,பத்திரிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை நீக்க கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.அப்போது வழக்கறிஞர் எம்.எல். ஷர்மாவின் மனுவை அரை மணி நேரம் படித்தும்,மனுவை புரிந்துகொள்ள முடியவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் என்ன நிவாரணம் வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்கள் நீதிபதிகள்.அந்த மனுவில் உள்ள பிழைகளை சரிசெய்து மீண்டும் மனுதாக்கல் செய்ய வலியுறுத்தினார்கள் நீதிபதிகள்.
அத்துடன் 370-வது சட்டபிரிவு நீக்கத்திற்கு எதிராக மனுக்களில் உள்ள பிழைகளை சரிசெய்து மீண்டும் மனுதாக்கல் செய்ய 6 பேருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டைம்ஸ் நாளிதழின் எடிட்டர் அனுராதா பாசின் வழக்கில் மத்திய அரசு அளித்த பதிலில்,காஷ்மீரில் எந்த பத்திரிக்கைகளும் மூடப்படவில்லை என்று தெரிவித்தது.பின்னர் காஷ்மீர் மாநிலத்திற்கு விதிக்கப்பட்ட தடையையும் நீக்கம் மறுப்பு தெரிவித்துவிட்டது உச்சநீதிமன்றம்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…