அயோத்தியில் உள்ள பாபர் மசூதி மற்றும் ராமஜன்மபூமியின் 2.77 ஏக்கர் நிலம் மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பேரும் பிரித்துக் கொள்ளும்படி கடந்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து மூவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் அதனைத் தாண்டி 14 மேல்முறையீட்டு மனுக்களும் இந்த வழக்கின் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது . ஒரு முடிவு எட்டப்படாததால் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
பின்னர் கடந்த ஒரு வாரமாக நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இதனை விசாரித்து வந்தது. மேலும் ஒரு குழு அல்லது மத்தியஸ்தரை வைத்து இந்த பிரச்சனை தீர்க்க முடியுமா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த அறிவுரையை இந்து அமைப்புகள் எதிர்க்க முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக் கொண்டது.
பின்னர் பல தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி எப்.எம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவில் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…