நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு ! ஒத்திவைத்த நீதிமன்றம்

மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இணைந்தார்.ஆனால் இந்த சமயத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 22 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
இதில் சபாநாயகர் நர்மதா பிரசாத் 6 பேரின் ராஜினாமாவை ஏற்றார். மீதமுள்ள 16 பேரின் ராஜினாமா இதுவரை ஏற்கவில்லை.இந்நிலையில் ஆளுநர் லால்ஜி டாண்டன் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு காங்கிரஸ் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதையெடுத்து மத்தியப்பிரதேச சட்டப்பேரவை கூடியது. ஆனால் சட்டப்பேரவை கூடிய சில மணி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் நடைபெற இருந்த கமல்நாத் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு தாமதம் செய்து வருவதாக கூறி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக சார்பில் முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மனு தாக்கல் செய்தார் .இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.வழக்கினை நாளை காலை 10.30 மணிக்கு விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024