Categories: இந்தியா

நீட் கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க முடியாது.! உச்சநீதிமன்றம் அதிரடி.!

Published by
மணிகண்டன்

டெல்லி: கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வை இந்தியா முழுக்க சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இதன் முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியாகி பெரும் சர்ச்சைகளை எழுப்பியது.

அதில், ராஜஸ்தானில் ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்தது, 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்தது, 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியது என பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன.

இதனை அடுத்து, குஜராத், ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களில்  உள்ள நீதிமன்றங்களில் இந்த முறைகேடுகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இதனை ஒரே வழக்காக உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. சுமார் 50 மாணவர்கள் ஒன்றிணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இப்படியாக சுமார் 8 வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  நேற்று நடைபெற்ற விசாரணையில், நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக தேசிய தேர்வு முகமை (NTA), மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.  வழக்கு ஜூலை 8க்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை முடியும் வரையில், நீட் தேர்வு மதிப்பெண் கொண்டு நடைபெறும் மருத்துவ படிப்புக்கான சேர்க்கையை (கவுன்சிலிங்) நிறுத்தி வைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டு இருந்தது. இதற்கு இன்று பதில் அளித்த நீதிபதி அமர்வு, நீட் கவுன்சலிங்கிற்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.

குறைந்தபட்சம், அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் ஜூலை 8 வரையில் நீட் கவுன்சலிங் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது. ஆனால் ஜூன் 6இல் நீட் கவுன்சலிங் தொடங்கி முடிய கால அவகாசம் ஆகும் என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்து இருந்தது. இதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

8 minutes ago
”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

2 hours ago
போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

3 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

4 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

4 hours ago

டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…

4 hours ago