நிர்பயா குற்றவாளிகள் தூக்குத்தண்டனையை நிறுத்த கோரி இறுதி மனு – உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

Published by
பாலா கலியமூர்த்தி

நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்று 5.30 மணிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளின் ஒருவரான பவன்குப்தா தூக்கு தண்டனையை நிறுத்த கோரி புதிய மனு ஒன்று தாக்கல் செய்தார். கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட புதிய மனுவை சீராய்வு செய்ய குறைந்த அளவே வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்த நீதிமன்றம்  சிறையில் துன்புறுத்தப்பட்டதாக தெரிவிப்பது, விதிக்கப்பட்ட தண்டனையை சீராய்வு செய்வதற்கான காரணமாக கூற முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து தூக்கு உறுதி என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும் குற்றவாளிகளை இறுதியாக சந்திக்க பெற்றோருக்கு 5 முதல் 10 நிமிடம் வரை ஒதுக்க வேண்டும் என அவர்களின் வழக்கறிஞர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசு தரப்பு முடிவு செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார். ஆனால் சட்ட விதிகள் இடம்கொடுக்காது என்றும், இருபக்கமும் துயரத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தனர். பின்னர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நீதிக்கு கிடைத்த வெற்றி என நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார். இதையடுத்து காலை தூக்கிலிடப்பட உள்ள நிர்பயா குற்றவாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் உடல்நலத்துடன் உள்ளதாக திகார் சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

60 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago