பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு முடக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு பிப்.6 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட இன கலவரத்துக்கு அப்போது அந்த மாநில முதல்-மந்திரியாக இருந்த தற்போதைய பிரதமர் மோடிக்கு தொடர்பு உள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு ஆவண படத்தை தயாரித்து வெளியிட்டு இருந்தது.
இந்த படத்தை மத்திய அரசு இந்தியாவில் வெளியிட தடை விதித்தது. ஆனால் தடையை மீறி நாட்டில் சில பல்கலைக்கழகங்களில் இப்படம் திரையிடப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு முடக்கியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மாவால் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பாக, இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என எம்.எல்.சர்மா தரப்பு வலியுறுத்தி இருந்த நிலையில், இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை பிப்ரவரி 6-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர்…
சென்னை : புழல் சிறையிலிருந்து நேற்று மாலை நிபந்தனை ஜாமீனில் வெளிய வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் கொண்டாடி…
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக புழல் சிறையில் இருந்து நேற்று மாலை செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த "மெய்யழகன்" திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே…
கான்பூர் : நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில்…