தாலிபான்களை ஆதரிப்பது பெண்களையும், புத்தரையும் அவமதிப்பதற்கு சமம் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள லக்னோவில் சமாஜிக் பிரதிநிதி சம்மேளம் எனும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தலிபான்கள் குறித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பதாக ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கௌதம புத்தரின் சிலையை தலிபான்கள் அழித்ததாகவும், இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு கடவுள் அவர்களை தண்டிக்கும் விதமாகத்தான் அமெரிக்கா தலிபான்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது எனவும் நாங்கள் கூறியிருந்தோம்.
இருப்பினும் இன்றும் நம் நாட்டில் பலர் தாலிபான்களுக்கு ஆதரவாக உள்ளனர். தலிபான்களை ஆதரிப்பது பெண்கள் மற்றும் புத்தரை அவமதிப்பது போன்றது. எனவே அத்தகையவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் புத்தர் ஒருபோதும் உலகின் மீது போரை திணிக்கவில்லை, அவர் மனித குலத்திற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும், பக்தியின் மையமாகவும் தான் இருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…