ஹரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஜூன் 15ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதுடன், ஆசிரியர்கள் 50% பள்ளிக்கு வருகை தரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் என அனைத்துமே சரியாக திறக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்றே குறைந்து இருந்தாலும், தற்போது வரை அம்மாநிலத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஹரியானாவில் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை எனவும், அதன் பின் பள்ளிகள் திறக்கலாம் என மாநில அரசு முடிவு செய்திருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஜூன் 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறையை நீட்டித்து அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…