எல்லை விவகாரத்தில் மோடி மீது குற்றம் சாட்டி வருவதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக மாநிலங்களவை எம்.பி சுக்லா.
இந்திய சீன எல்லைகளில் ஒன்றான லடாக் பகுதிகளில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இந்த ஆயுதமில்லா தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்த எல்லை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக, பேசிய பாஜகவை சேர்ந்தவரும், மாநிலங்களை எம்பியுமான சுக்லா பேசுகையில், ‘ இந்திய சீன எல்லை விவகாரத்தில் ராஜதந்திரம் மற்றும் இராணுவ அளவிலான இருநாடுகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தைகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மேலும், பிரதமர் மோடியின் சமீபத்திய இந்திய சீன எல்லை பயணமும் பொதுமக்களிடமும், ராணுவத்தினரிடமும் மன உறுதியை உயர்த்தியுள்ளது.’ என கூறியுள்ளார்.
‘இதனால், எல்லை விவகாரத்தில் மோடி மீது குற்றம் சாட்டி வருவதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என சுக்லா குறிப்பிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…