சர்க்கரை ஆலைகள் அனைத்தும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதில் ஈடுபட வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதன் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்கள் ஒருபுறமிருக்க, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியாமலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது.
எனவே ஆக்சிஜன் தேவையை நிறைவு செய்வதற்காக பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அது போல மராட்டிய மாநிலத்திலுள்ள உஸ்மானாபாத் மாவட்டத்திலுள்ள தராசிவ் சர்க்கரை கூட்டுறவு ஆலை ஆக்சிஜன் ஆலையாக மாற்றி தினசரி 96 சதவீத தூய்மையுடன் 6 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறதாம். இந்த திட்டத்தை நேற்று முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார்.
அதன் பின் பேசிய முதல்வர் அவர்கள், மராட்டிய மாநிலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி திறன் ஒரு நாளைக்கு 1200 மெட்ரிக் டன் இருந்தாலும், ஆக்சிஜன் தேவை ஒரு நாளைக்கு ஆயிரத்து 1, 700 மெட்ரிக் டன் இருக்கிறது. எனவே தினமும் 3 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்தால் தான் நாம் தன்னிறைவு பெற முடியும் எனவும், மாநகராட்சிகள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்கின்றன, அதுபோல சர்க்கரை கூட்டுறவு ஆலைகலும் இதை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…