ஆக்ஸிஜன் உற்பத்தியில் சர்க்கரை ஆலைகளும் ஈடுபடவேண்டும் – மராட்டிய முதல்வர் கோரிக்கை!

Published by
Rebekal

சர்க்கரை ஆலைகள் அனைத்தும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதில் ஈடுபட வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதன் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்கள் ஒருபுறமிருக்க, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியாமலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது.

எனவே ஆக்சிஜன் தேவையை நிறைவு செய்வதற்காக பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அது போல மராட்டிய மாநிலத்திலுள்ள உஸ்மானாபாத் மாவட்டத்திலுள்ள தராசிவ் சர்க்கரை கூட்டுறவு ஆலை ஆக்சிஜன் ஆலையாக மாற்றி தினசரி 96 சதவீத தூய்மையுடன் 6 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறதாம். இந்த திட்டத்தை நேற்று முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார்.

அதன் பின் பேசிய முதல்வர் அவர்கள், மராட்டிய மாநிலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி திறன் ஒரு நாளைக்கு 1200 மெட்ரிக் டன் இருந்தாலும், ஆக்சிஜன் தேவை ஒரு நாளைக்கு ஆயிரத்து 1, 700 மெட்ரிக் டன் இருக்கிறது. எனவே தினமும் 3 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்தால் தான் நாம் தன்னிறைவு பெற முடியும் எனவும், மாநகராட்சிகள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி செய்கின்றன, அதுபோல சர்க்கரை கூட்டுறவு ஆலைகலும் இதை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago