Categories: இந்தியா

மோடியை சீனாவுக்கு தூதரக நியமிக்க வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி

Published by
பாலா கலியமூர்த்தி

Subramanian Swamy: பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்.

கடந்த ஆண்டுகளாவே இந்திய எல்லை பகுதிகளை சீனா சொந்த கொண்டாடி வரும் சூழல் நிலவி வருகிறது. அதில் குறிப்பாக அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் மீது உரிமை கொள்ளும் வகையில் சீனா தனது செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட அருணாச்சல் பிரதேசத்தின் பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியுள்ள சம்பவம் நடந்தது.

அதன்படி, கிழக்கு அருணாச்சப் பிரதேசத்தில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட “ஸங்னங்” பகுதி என பெயரிட்டுள்ளது. மொத்தம் 30 இடங்களுக்கு மேல் சீனா பெயரை மாற்றி உள்ளது. இதில், 11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ளது.

இந்த பெயர் சூட்டும் சம்பவம் நான்காவது முறையாக சீனா கையாண்டுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது, அருணாச்சல பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒரு அங்கம்தான். பெயரை மாற்றி சீனா உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கதல்ல. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு ராணுவம் கண்காணிப்பில் உள்ளது என கூறியிருந்தார்.

இந்த நிலையில், மோடியை சீனாவுக்கு தூதரக நியமிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், அருணாச்சல பிரதேசத்தில் இருந்து லடாக் வரை இந்திய பகுதிகளை சீனா தட்டி பறிக்கிறது. சீனா ஆக்கிரமித்ததாக கூறப்படும் இடத்திற்கு யாரும் வரவில்லை, நாங்களும் போகமாட்டோம் என பிரதமர் மோடி கூறி வருகிறார். இதனால் பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.

Recent Posts

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…

3 hours ago

மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!

ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…

4 hours ago

NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…

துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…

5 hours ago

வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!

சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…

5 hours ago

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

8 hours ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

8 hours ago