ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித சிக்கல்களையும் எதிர்கொள்ள கூடாது – மத்திய கல்வித்துறை அமைச்சர்.!

Published by
Ragi

ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எந்தவித சிக்கல்களையும் எதிர்கொள்ள கூடாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார்

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு, இன்று முதல் 6 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 600 மையங்களில் 9,53,473 மாணவ, மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு கொரோனா அச்சம் காரணமாக பல கட்டுபாட்டுகளை அரசாங்கம் விதித்துள்ளது. ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறுகையில், இந்த கொரோனா சூழலில் மாணவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும், அவர்கள் தேர்வின் போது எந்த சிக்கல்களையும் எதிர்கொள்ள கூடாது என்றும் கூறியுள்ளார். அதற்கு நாம் அனைவரும் கூட்டமாக செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, ஜேஇஇ தேர்வுக்கு 8 புள்ளி 58 லட்சம் பேர் விண்ணப்பித்த இருந்த நிலையில் அதற்கான அனுமதி அட்டையை 7 லட்சத்து 77 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், நீட் தேர்வுக்காக 15.97 லட்சம் பேர் விண்ணப்பித்த இருந்த நிலையில், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அதற்கான அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, மாணவர்களின் நலனுக்காகவும், அவர்களது எதிர்காலம் கருதியும் கூட்டாக முயற்சி செய்ய வேண்டும். மாநில முதல்வர்கள் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…

11 minutes ago

தம்பி இது தீர்வு இல்லை…தற்கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர்..போலீசாரின் செயல்?

கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…

53 minutes ago

உயிரினங்கள் வாழும் இன்னொரு கோள்? கண்டுபிடித்து அசத்திய இந்திய வம்சாவளி விஞ்ஞானி நிகு மதுசூதன்!

கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில்,  உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…

2 hours ago

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

12 hours ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

14 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

14 hours ago