“அமித்ஷாவை கண்டா வரச் சொல்லுங்க!கையோட கூட்டி வாருங்க”- காங்கிரஸ் கட்சி மாணவரணி புகார்!!!

Published by
Edison

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லி காவல்துறையினரிடம்,காங்கிரஸ் கட்சியின் மாணவரணியினர் புகார் அளித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மாணவரணி அமைப்பான,இந்திய தேசிய மாணவர் சங்கத்தின்(என்.எஸ்.யு.ஐ) பொதுச் செயலாளர் நாகேஷ் காரியப்பா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லி பாராளுமன்ற தெரு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து,நாகேஷ் காரியப்பா அளித்த புகாரில்,”நாடு முழுவதும் அதிக அளவிலான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர்.இந்நிலையில்,நாட்டின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை.எனவே,அவரை கண்டுபிடித்து தர வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து,இந்திய தேசிய மாணவர் சங்க அலுவலகத்துக்கு டெல்லி காவல்துறையினர் நேரில் சென்று புகார் அளித்தவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள்.

இதனைத்தொடர்ந்து,டெல்லி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நாகேஷ் காரியப்பா கூறியதாவது,”நாடு முழுவதும் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் என்ற கொடிய தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த சூழலில்,இதற்கு பொறுப்பு கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அரசியல் தலைவர்களின் கடமையாகும்.எனவே,அரசியல் தலைவர்கள் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டுமே தவிர நெருக்கடி சூழ்நிலைகளிலிருந்து ஓடி விடக்கூடாது.

ஆனால்,இந்த கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு மத்தியில், நாட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நீண்ட நாட்களாக காணவில்லை.எனவே,அமித்ஷா இப்போது நாட்டின் உள்துறை அமைச்சரா?,இல்லை பா.ஜ.க கட்சியின் உறுப்பினர் மட்டுமா? என்று தெரியவில்லை.அதனால்,எங்களின் புகார் தொடர்பாக மத்திய அரசின் பதில்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்”, என்று கூறினார்.

Recent Posts

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

6 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

31 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

44 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

1 hour ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

2 hours ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

2 hours ago