டெல்லியில் அரசு பள்ளி ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.
டெல்லியின் இந்தர்புரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் செய்முறைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பூதேவ் என்ற ஆசிரியர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். செய்முறைத் தேர்வின் போது ஒரு மாணவர் ஆசிரியரை கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து அந்த ஆசிரியருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த மாணவனை கைது செய்தனர்.
மேலும் அவனிடமிருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். காயமடைந்த ஆசிரியர் பூதேவ் பி.எல்.கே.கபூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…