பெண்களிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கேரளா முதல்வர்!

Published by
Rebekal

வரதட்சணை கேட்டு பெண்களை துன்புறுத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரளா முதல்வர் பினராயி  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் கடந்த சில மாதங்களாக பெண்கள் சிலர் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து வரதட்சணைக்கு எதிராக கேரளாவில் அம்மாநில ஆளுநர் சமீபத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், கேரளாவில் வரதட்சணை கேட்டு பெண்களைத் துன்புறுத்துவது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், காந்திய வழியில் விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் கேரளா ஆளுநர் உண்ணாவிரதம் மேற்கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது போன்று சமூக விழிப்புணர்வு மேற்கொண்டால் தான் வரதட்சணை கொடுமையை தடுக்க முடியும் எனவும், கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் வரதட்சணை தொடர்பான வழக்குகளில் கேரளாவில் 100 உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும், 2016 முதல் 2021 வரை இந்த உயிரிழப்புகள் 54 ஆக குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக 2020 – 2021 காலகட்டத்தில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இனிமேல் கேரளாவில் வரதட்சணை கேட்டு பெண்களைத் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Published by
Rebekal

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

3 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

21 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

21 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

21 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

21 hours ago