உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாள்தோறும் வெளியில் சென்று வேலை செய்த ஆண்களுக்கும் சரி, வெளியில் இருந்துகொண்டு மருத்துவர்களாகவும் காவல்துறை அதிகாரிகளாகவும் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டிருக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சரி மன உளைச்சல் என்பது தற்போது அதிக அளவில் ஏற்படுகிறது.
எனவே புதுக்கோட்டையில் இதற்கான ஒரு சிறந்த செயல்பாடு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அதாவது மன அழுத்தம் ஏற்படுபவர்களுக்கு தொலைபேசி வழியாக நல்ல மன நல ஆலோசனை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த இரு 94860 67686, 94941 21297 எண்களில் தேவைக்கேற்ப ஆலோசகர்கள் ஆலோசனை கூறுவார்கள். தமிழக அரசின் அனுமதியோடு மார்ச் 26ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை தடுப்புப் நடவடிக்கையில் உள்ளவர்கள் என அனைவருக்குமே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும், இது குறித்து கூறும் அந்த திட்டத்தின் அலுவலர் ரெ.கார்த்திக் தெய்வநாயகம் அவர்கள் கஜா புயலில் சிக்கியவர்களுக்கு கொடுக்கப்பட்ட மனநல ஆலோசனை நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, இந்த திட்டமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டம் முதலில் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…