Marries Mother In Law: பீகார் மாநிலம் பாங்காவில் இருந்து வந்த ஒரு அதிர்ச்சிகரமான செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே ஏற்பட்ட காதல் கதை கடைசியில் திருமணமாக முடிந்துள்ளது. இந்த சம்பவம் பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தையும் தாண்டி பரவ தொடங்கியது. இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்த பலரும், எப்படி இப்படியொரு நிலை உருவாகும் என்று யோசித்து சமூக வலைதளங்ளில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பீகாரை சேர்ந்த சிக்கந்தர் யாதவின் மனைவி, சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்திருக்கிறார். அவரது மனைவி இறந்த பிறகு, சிக்கந்தர் தனது மாமியார் வீட்டில் வசிக்கத் தொடங்கினார். அந்த சமயத்தில், மாமியார் மற்றும் மருமகன் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வலையில் விழுந்துள்ளனர்.
இந்த காதல் நாளடைவில் பெரியதாக வளர, நெருக்கமாக பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த காதல் விவகாரம் மாமனாருக்கு தெரிய வந்துள்ளது. இருவரும் நெருக்கமாக இருப்பதை அறிந்ததும், மாமனார் ஊர் பஞ்சாயத்தை கூட்டி உள்ளார்.
இந்நிலையில், ஊர் பஞ்சாயத்தில் வைத்து மாமியார் மீதான காதலையும் தாங்கள் நெருக்கமாக இருந்ததையும் அனைவரது முன்னிலையில் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, ஊர் பஞ்சாயத்தும் இதற்கு சம்மதம் தெரிவித்து. அவரது மாமனார் தலைமையில், மாமியார் மற்றும் மருமகன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…