கரையை கடந்தது ரெமல் புயல்…மேற்கு வங்காளத்தில் கொட்டும் கனமழை!

Published by
பால முருகன்

ரெமல் புயல் : மணிக்கு 135 கிமீ வேகத்தில் ரெமல் புயல் கரையைக் கடந்த காரணத்தால்  மேற்கு வங்காளத்தில் மரங்களை வேரோடு சாய்ந்து கனமழை பெய்து வருகிறது.

கடந்த மே 23-ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மே 24-ஆம் தேதி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. பிறகு, இது வடகிழக்கு திசையில் நகர்ந்து காலை 08:30 மணி அளவில் மத்திய வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற்றது.

புயலுக்கு ரெமல் புயல் என்று பெயரும் வைக்கப்பட்டு இருந்தது.  மேற்கு வங்காளம் மற்றும் வங்க தேசதிற்கு இடையே ரெமல் புயல் நேற்று (மே 26 ) இரவு கரையை கடந்தது. புயலின் காரணமாக  மேற்கு  வங்காளத்தில் இருந்த 8 லட்சம் பேரும் மேற்கு வங்கத்தில் இருந்த 1 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

மேலும், இந்த புயலானது, நேற்று இரவு 8.30 மணியளவில் மேற்கு வங்கத்தில் உள்ள சாகார் தீவுகளுக்கும், வங்கதேசத்தில் உள்ள கேப்புபாராவிற்கும் இடையே கரையே கடந்தது. புயல் கரையை கடக்கும் போது வங்கதேசத்திலும், மேற்கு வங்க மாநிலத்திலும் காற்று மணிக்கு 110-120 கிமீ வேகத்திலும், அதிகபட்சம் 135 கி.மீ வேகத்திலும் வீசியது.

இந்த புயலின் காரணமாக டெக்சாஸ், ஓக்லஹோமா மற்றும் ஆர்கன்சாஸில் இறப்புகளும் ஏற்பட்டுள்ளது. புயலில் 15 பேரைக் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததுள்ளதாகவும் முதற்கட்டமாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே சமயம், மேற்கு  வங்காளத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

1 hour ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

2 hours ago

ஸ்பெயின் கார் ரேசில் மீண்டும் விபத்து… அஜித்-ன் கார் விபத்து எப்படி நடந்தது?

ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…

3 hours ago

தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!

தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…

4 hours ago

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!

சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…

5 hours ago

AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…

16 hours ago