Categories: இந்தியா

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்துங்கள் – கர்நாடக முன்னாள் முதல்வர்!

Published by
பாலா கலியமூர்த்தி

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை கர்நாடகா காங்கிரஸ் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், மாநிலத்தில் நிலவும் உண்மையான சூழலை உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியதை அடுத்து காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்ததும், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம். காவிரி நதிநீர் விவகாரத்தில் மாநிலத்தில் ஒருமித்த கருத்து இல்லை.

கர்நாடகா விவசாயிகளுக்கு காங்கிரஸ் அரசு துரோகம் செய்துள்ளது. ஆளும் காங்கிரஸ் அரசின் அணுகுமுறையால் கர்நாடக காவிரி படுகை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்கவில்லை என்பதால் உரிய தண்ணீரை திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இதனைத்தொடர்ந்து, கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வினாடிக்கு சுமார் 14,000 கன அடி திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கர்நாடக அரசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன் சொன்ன முக்கிய தகவல்!

தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…

4 minutes ago

“தலை துண்டிக்கப்படும்., விரைவில் இரங்கல் செய்தி வரும்?” சீமானுக்கு கொலை மிரட்டல்!

சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…

16 minutes ago

நடிகர் சங்க வழக்கு : கார்த்தி, நாசர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…

31 minutes ago

“பேன்ட் போட்ட முதல் அரசியல்வாதி நான் தான்!” விஜய பிரபாகரன் பேச்சு!

தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…

44 minutes ago

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டுமா? – முதலமைச்சர் அசத்தல் ரீப்ளே!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…

51 minutes ago

மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?

சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…

2 hours ago