தெலுங்கானா மாநிலத்தில் விசாகப்பட்டினம்-செகந்திராபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கல்வீசி தாக்குதல் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் கம்பம் மாவட்டத்தில் விசாகபட்டினத்திலிருந்து செகந்திராபாத் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் சேதமடைந்த அவசரகால ஜன்னலை மாற்ற வேண்டியிருந்ததால், ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 15 ஆம் தேதி செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது நாட்டின் 8-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் தெலுங்கானா-ஆந்திராவை இணைக்கும் முதல் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். சுமார் 700 கிமீ தொலைவை இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், 8.30 மணிநேரத்தில் கடக்கும் என்று கூறப்படுகிறது.
ஒரு மாதத்திற்குள் இது இரண்டாவது சம்பவமாக பதிவாகியுள்ளது. ஜனவரி 11ம் தேதி விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திற்கு பராமரிப்பு மற்றும் சோதனை ஓட்டத்திற்காக ரயில் வந்தபோது இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இதில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…