Categories: இந்தியா

தேர்தல் நேர பங்குசந்தை சரிவு.! உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!

Published by
மணிகண்டன்

டெல்லி: தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதி உடன் நிறைவு பெற்றது. அதன் பிறகு வெளியான கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன் காரணமாக அதற்கடுத்து ஜூன் 3 ஆம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு பங்குச்சந்தை உச்சம் தொட்டது.

ஆனால், அடுத்து ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி கருத்துக்கணிப்புகள் கூறியதற்கு சற்று மாற்றாக முடிவுகள் வெளியாகின. இதனால், பாங்குசந்தை அன்றைய தினம் வீழ்ச்சியடைந்தது.இது குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை காங்கிரஸ் கட்சியினர் முன்வைத்தனர்.

தற்போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. முன்னதாக அதானி நிறுவனம் பற்றி ஹிண்டன்பர்க் பத்திரிகை வெளியிட்ட செய்தி காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வெளிநாட்டு பத்திரிகை செய்தி காரணமாக இந்திய நாட்டு பங்குச்சந்தை சரிவு ஏற்பட்டது.

அதனால் உள்ளூர் சிறு முதலீட்டாளர்கள் பெர்ம் நஷ்டத்தை சந்தித்ததாக கூறி இதுகுறித்து SEBI விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே SEBI விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

தற்போது அதே வழக்கில் இடைக்கால மனுவாக வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்துள்ளார். அதில், தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் பங்குச்சந்தை சரிந்தது அதனால். பல முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்தனர். இதுகுறித்து SEBI விசாரணை நடத்தி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

1 hour ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago