ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என ஒருமனதாக முடிவெடுத்து, 5 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், நிலைமையை பொறுத்து ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் ஆலையை இயக்கவேண்டுமா? என்பது குறித்து பிறகு முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிலையில், அந்த ஐந்து நிபுணர்களை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு தேர்வு செய்யும் என்று கூறப்பட்டது. அந்த குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…