பீகாரைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., மகேந்திர பிரசாத் டெல்லியில் உடல்நலக்குறைவால் காலமானார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்பி மகேந்திர பிரசாத் (81 வயது) நீண்ட நாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். எம்பி மகேந்திர பிரசாத் 1985 முதல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர். முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் அதன் பிறகு ஜனதா தளத்தில் இணைந்தார்.
பின்னர், லலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு மகேந்திரா நியமிக்கப்பட்டார். இதையடுத்து பீகாரில் ஆர்ஜேடி ஆட்சியை இழந்தபோது, மகேந்திர பிரசாத் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவரை ராஜ்யசபாவுக்கு தொடர்ந்து மூன்று முறை எம்பியாக நியமிக்கப்பட்டார்.
ராஜ்யசபாவில் அவருக்கு இன்னும் இரண்டாண்டு பதவி காலம் இருந்தது. இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் எம்பி மகேந்திர பிரசாத் மறைவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றன. மகேந்திரனின் மறைவால் அரசியல் மற்றும் தொழில்துறையில் உலகம் ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்தித்துள்ளது என்று நிதிஷ்குமார் கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…