ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 10 தலைவர்கள் கூட்டாக கடிதம்.
2018ல் பீமா – கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாக சமூக போராளி ஸ்டேன் சுவாமி கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இவருக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கை என்ஐஏ அமைப்பு விசாரித்து வந்த நிலையில், பெயில் மறுக்கப்பட்டு வந்தது. இதனிடையே, ஸ்டேன் சுவாமி உடல்நிலை மோசமானதை அடுத்து இவர் கடந்த சில வாரமாக தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஸ்டேன் சுவாமி இன்று காலமானார்.
இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ஸ்டேன் சுவாமி சிறைக் காவலில் காலமானதை அடுத்து மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சமூக போராளி ஸ்டேன் சாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில், ஸ்டேன் சுவாமி மீது பொய்யான வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும், மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட 10 தலைவர்கள் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…