கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை!

Published by
Rebekal

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் பொழுது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. கடந்த வாரம் கூட பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஆனால் இந்த தாக்குதலில் உயிர் இழப்புகள் எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர் தப்பியதாகவும் செய்திகள் வெளியாகியது. ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என இலங்கை அரசு மறுத்த நிலையில், தற்போது தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற பொழுது இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 600க்கும் மேற்பட்ட விசைப் படகில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் 20க்கும் மேற்பட்ட விசைப் படகில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியதுடன், இந்த பகுதிக்கு வரக்கூடாது என எச்சரித்து விரட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை இராமேஸ்வர மீனவர்கள் வலைகள் அனைத்தையும் இழந்து நஷ்டத்துடன் திரும்பியுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago