விமான நிலையங்களில் கொரோனா நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு ஸ்பாட் ஃபைன்..!

Published by
murugan

விமான நிலையத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களுக்கு ஸ்பாட் ஃபைன் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சில விமான நிலையங்களில் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என புகார் எழுந்துள்ளது. விமான நிலையங்களில் கொரோனா நெறிமுறை மற்றும் விதிமுறைகளை பின்பற்றாதது கவலை அளிக்கிறது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற அனைத்து கொரோனா விதிகளும் விமான நிலையத்தில் முழுமையாக பின்பற்றப்படுவதை அனைத்து விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல், விமான நிலையத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களுக்கு ஸ்பாட் ஃபைன் எனவும் விமானத்தின் உள்ளே முகமூடிகளை சரியாக அணியாவிட்டால் அல்லது கொரோனா விதிகளை  பின்பற்றாவிட்டால் பயணிகள் விமானங்களில் இருந்து “டி-போர்டிங்” விமானத்தில் இருந்து இறக்கி விடப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் மூன்று உள்நாட்டு விமானங்களில் கொரோனா விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட 15 பயணிகளை மூன்று மாதங்களுக்கு தடை செய்யக்கூடும் என்று டிஜிசிஏ அதிகாரி ஒருவர் கடந்த வாரம் தெரிவித்தார். இண்டிகோவின் ஒன்பது பயணிகள், அலையன்ஸ் ஏர் நான்கு மற்றும் ஏர் ஏசியா இந்தியாவின் இரண்டு பயணிகள் மார்ச் 15 முதல் மார்ச் 23 வரை பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இது மட்டுமல்லாமல், தினசரி இறப்பு எண்ணிக்கையிலும் அதிகரித்து வருகிறது என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,000-க்கும் மேற்பட்ட கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 271  பேர் உயிரிழப்பு:

இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் நேற்று 56,211பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், இந்தியாவில் மொத்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,20,95,855 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 271 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,62,114 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிக்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5,40,720 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

1 hour ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

3 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

6 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

6 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

7 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

7 hours ago