கொரோனா வைரஸ் காரணமாக டெல்லி, மும்பை, ஹவுரா, அகமதாபாத் இடையே தினசரி இயங்கப்படும் சிறப்பு ரயில்களை வாரத்தில் ஒருமுறை இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லி, மும்பை, சென்னை, புனே, நாக்பூர் மற்றும் அகமதாபாத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு செல்லும் பயணிகள் விமானங்கள் திங்கள்கிழமை முதல் ஜூலை 19 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மேற்கு வங்க அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஹவுரா, டெல்லி, மும்பை, அகமதாபாத் இடையே தினசரி இயங்கப்படும் சிறப்பு ரயில்களை வாரத்தில் ஒருமுறை இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
பாட்னா வழியாக செல்லும் 02303/02304ஹவுரா – புது டெல்லி – ஹவுரா சிறப்பு ரயில் மற்றும் தன்பாத் வழியாக செல்லும் 02381/02382 ஹவுரா – புது டெல்லி – ஹவுரா சிறப்பு ரயிலும் ஜூன் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த இரண்டு சிறப்பு ரயில்களும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வாரத்தில் ஒரு முறை இயங்கும் என்று கிழக்கு ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
மேலும் இந்த இரண்டு ரயில்களும் ஹவுராவிலிருந்து ஜூலை 10 முதலும், புது டெல்லியிலிருந்து ஜூலை 11 முதலும் இயக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…