நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு ஜாமீன் கிடையாது – மும்பை சிறப்பு நீதிமன்றம்

Published by
Venu

நடிகை ரியாவிற்கு   ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து , வழக்கினை தள்ளுபடி செய்தது மும்பை சிறப்பு நீதிமன்றம்.

கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதனால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் நடிகை ரியா, அவரது சகோதரருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இந்த கொலை வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால்   ரியா சக்ரபொர்த்தி கைது செய்யப்பட்டார். அவரது சகோதரர் ஷோயிக், சுஷாந்தின் உதவி தீபேஷ் சாவந்த் மற்றும் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ரியா சக்ரபொர்த்தியிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் மாஜிஸ்டிரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது  அவரை  செப்டம்பர் 22-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க விசாரணை போதை பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.இதனிடையே போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா சக்ரபோர்த்தி,சகோதரர் ஷோயிக் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி  மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள்  தாக்கல் செய்தனர். ரியா தாக்கல் செய்த மனுவில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தன்னிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து இன்று ஜாமீன் மனுக்கள்  மீதான விசாரணை நடைபெற்றது.அதில் ரியா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து , வழக்கினை தள்ளுபடி செய்தது மும்பை சிறப்பு நீதிமன்றம்.

Published by
Venu

Recent Posts

மழைக்கு வாய்ப்பு உண்டா? ‘அடுத்த 6 நாட்களுக்கு இதுதான் நிலைமை ‘ – வானிலை மையம் அப்டேட்.!

மழைக்கு வாய்ப்பு உண்டா? ‘அடுத்த 6 நாட்களுக்கு இதுதான் நிலைமை ‘ – வானிலை மையம் அப்டேட்.!

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…

16 minutes ago

பாஜக போராட்டத்திற்கு விசிக வரவேற்பு! திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…

1 hour ago

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

1 hour ago

முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின், 2ஆம் குற்றவாளி செந்தில் பாலாஜி! அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

2 hours ago

வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை…. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…

2 hours ago

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம்: பாஜக தலைவர் அண்ணாமலை கைது.!

சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…

2 hours ago