சிக்கிம் மாநிலத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்க திட்டம்.!

Default Image

சிக்கிம் மாநிலத்தின் கங்டக்கில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு எஸ்.என்.டி பஸ் சேவை இயக்க திட்டம்.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சிக்கிம் மாநில அரசு  செப்டம்பர் 21 முதல் 27 வரை காங்டாக் நகராட்சி பகுதியில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், சிக்கிம் மாநிலத்தின் கங்டக் பகுதியில் சிறப்பு பேருந்து இயக்க திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், கங்டக்கில் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது  தேர்வு மையங்களுக்கு செல்ல எஸ்.என்.டி பேருந்து நிறுவனம் ராணிபூல், ரங்கா மற்றும் தாஷி வியூபோயிண்ட் ஆகிய பகுதியில் உள்ள அந்தந்த தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்தை இயக்கவுள்ளது.

அந்த வகையில், சிறப்பு பேருந்து சேவைக்காக தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ராணிபூல், ரங்கா மற்றும் தாஷி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மேலும், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு மற்றும் கல்லூரி பருவத் தேர்வுகள் நடைபெறவுள்ளதால் இந்த சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்