அக்டோடபர் 20 முதல் 22 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டம.!

Default Image

நவராத்திரி முன்னிட்டு ரயில்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று காரணத்தினால் தென்மேற்கு ரயில்வே நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு 22 சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக அறிவித்தது. அதில், முதல் கட்டமாக அக்டோபர் 20 ஆம் தேதி இயக்கப்டுகிறது.

இந்நிலையில், ஒரு ஜோடி மைசூரு-தார்வாட் பாதையில் அக்டோபர் 20 முதல் டிசம்பர் 1 வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தெலுங்கானா, மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா, பீகார், சத்தீஸ்கர், மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் உள்ளது. அனைத்து ரயில்களும் முழு முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களாக இயங்கும் என்று அறிவிகப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின் படி, இந்த ரயில்கள் சூப்பர்ஃபாஸ்ட் சேவைகளுக்கு இணையாக செல்ல குறைந்தபட்சம் 55 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பண்டிகை காலங்களில் நாட்டின் அனைத்து மண்டலங்களிலும் செயல்படுவதற்கான ரயில்வே வாரியத்தின் திட்டத்தில் மொத்தம் 196 ஜோடி ரயில்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்